Saturday, October 1, 2011

குரு - Guru


 what is power of குரு -  Guru 

குரு கீதை

எவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை

குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை

குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை

குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும்

தியானத்திற்கு மூலம் குருவின் மூர்த்தி

பூஜைக்கு மூலம் குருவின் பாதம்

மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபை


---- ஸ்ரீ குரு கீதை


குரு
தானாக தேடி வந்து, தன்னில் ஒரு துளியை உணர்த்தி, தன்னை பின்தொடர வைக்கும் பெருங்கருணை - குரு 

- வள்ளல் பெருமான்


Greatness of Guru
Love of Guru is greater than that of mother. Effulgence of Grace of Guru is vaster than that of God. Help by Guru is better than that of wife. Friendship of Guru surpasses that of hundreds of friends. Joy from Guru matches the joy from thousands of maiden. Happiness of Guru's Words is more than that of a grand feast.
Guru is complete and whole. Guru's love for disciple is whole. Guru's primary concern is the progress of disciple. He doesn't try to discuss or explain; yet His aim never deviates.

- Eluththu Siddhar Balakumaran.



இறை வாழ்த்து


மண்ணாய், மரமாய், ஊனாய், உணவாய், மணமாய்

மலர்ந்த வெளியே வாழி !
தண்ணாய், நீராய், தகதக நெருப்பாய், சுவையாய், பார்வையாய்
படர்ந்த வெளியே வாழி !
விண்ணாய் விரிந்து, காற்றாய் கரைந்து, ஒலியாய் தொட்டு
நின்ற வெளியே வாழி !
கண்ணாய், மனத்தினுள் கருத்துணர்ந்து உள்ளொளியாய்
ஒளிர்ந்து நின்ற வெளியே வாழி !





குரு பூர்ணிமா

குருவே உயர்வாகும் ! குருவே உணர்வாகும் !
குருவே உயிராகும் ! குருவே உலகமுமாகும் !
குருவே அன்பாகும் ! குருவே அறமுமாகும் !
குருவே கருணையாகும் ! குருவே கடவுளாகும் !



குருவே மானுடம் வெல்லவைத்த குருவடி போற்றி நின்றேன்
குருவே குண்டலி குத்தியுனர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே ஆறாதார உணர் உணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே கருவிடைக் கருத்துணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்


குரு சரணம்

குருவே சரணம் ! குருவே சரணம் !
குருவடி சரணம் ! குருபாதம் சரணம் !
குரு உரு சரணம் ! குரு சொல் சரணம் !
குரு பார்வை சரணம் ! குரு உணர்வே சரணம் !


உருநாடி குரு நாடி
இட நாடி வட நாடி
நடு நாடி நாட நாடி
உரு நாடி திரு நாடியே


No comments:

Post a Comment