Saturday, May 7, 2011

உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.


பெரிய ஞானக்கோவை
1. சிவவாக்கியர் பாடல்

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வமென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையேயாகும் என்கிறார்.

“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல் மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?
அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும்
உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்கிறார்.


கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று தொட்டு நடந்து வருபவை. இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்? புனிதமான அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.
ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர, நல்வழிப்படுத்த உருவ வழிபாடு தேவைப்படுகின்றது. சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத் தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான் கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை தரக் காத்திருக்கின்றார். ஆகவே தவறு செய்யாதே என்று கண்டிப்போமானால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில் கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில் பயனாகிறது. பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர். ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. உருவ வழிபாடு ஒரு மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும், உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று வாதிடுகின்றனர். சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்டவாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள். உலகைப் படைத்துக் காத்து, ழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது? இல்லை அந்தக் கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர்
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே


மனிதனுக்கு உருவ வழிபாடு ,தெய்வம் என்று ஒன்று உண்டு என சிறு வயது முதலாகவே வுனர்த்தவே .
அந்த சிறு வயதில் குழந்தைக்கு வேதா வேதாந்த சித்தாந்தமெல்லாம் புரியாது. ஆகவே அதை ஒரு உருவகமாய் கற்பனை செய்து நமது பெரியோர்கள் உருவ வழிபாடு; கோவில் என பலவற்றை நிறுவினர் .
சிறு வயதில் நாம் மணல் வீடு கட்டி விளையாடுவதுண்டு ,பிறகு பெரியவனானதும் அதிலா நாம் வசிக்கின்றோம் ?
அவ்வாறு வசிப்பது போல் இருக்கின்றது உருவ வழிபாடு .மெய்யான தெய்வத்தை னாடி அதில் அல்லவா னாம் குடியேறவேண்டும்.


கள் (drinks) உண்ணாமை vs புலால் மறுத்தல் ??


திருவள்ளுவ பெருந்தகை கள் உண்ணாமை என்றும், புலால் மறுத்தல் என்றும் கூறி இருப்பதன் காரணம்.

கள் என்பது பனை மரத்தில் இருந்தோ அல்லது தென்னை மரத்தில் இருந்தோ 

அதன் குலைகளை சீவி அதில் வடியும் பாலை குடத்தில் பிடித்து வைத்தால் 

அது புளிப்பு ஏறி போதை தரும் பொருளாக கள் ஆக மாறும்.


கள்ளை உண்ணக்கூடாது என்றதற்கு காரணம் நாம் பனை மற்றும் தென்னை மரத்தில் விளையும் பொருட்களான

நுங்கு, பணம் பழம், பனங் கிழங்கு போன்றவற்றையும் தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் போன்றவற்றையும் 

உணவாக உண்கிறோம். அதே போல பனை தென்னையில் இருந்து கிடைக்கும்



கள்ளையும் நாம் உண்பது தவறில்லை என்ற எண்ணம் நம் மனதில் வந்துவிடக் கூடாது

என்பதற்காகத்தான் கள் உண்ணாமை என்று கூறி உள்ளார்கள்.



கள் உண்பவர்களின் அறிவு மழுங்கி மற்ற பாவங்களை செய்வதற்கு தூண்டுகோலாய் 

அமைந்து விடும் என்ற காரணத்தால் கள் உண்ணக் கூடாது என்று கூறினார்கள்.



வேதாகமம் (bible) மதுப்பழக்கத்தை எச்சரிக்கிறது.



இஸ்ரவேல் திராட்ச ரசம் (மதுபானம்) உற்பத்தியாக்கும் ஒரு நாடா கும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆலைகளில் திராட்சைரசம் புரண் டோடுதல் ஆசீர்வாத்த்திற்கான அடையாளமாகும்.

( நீதி. 3:10) ஞானமானது தன் போஜனபந்தியை திராட்சை ரசத்தை வார்த்து வைத்து ஆயத்தப்படுத்துகிறது, புத்தியீன நோக்கி, எவன் பேதையோ அவன் வந்து பானம்பண்ணக்கடவன் என்று கூறுகிறது ( நீதி. 9:2-5) .
ஆனால் பழையஏற்பாட்டு ஆசாரியர்கள் திராட்சைரசத்தின் ஆபத் தைக் குறித்து அவதானமாக இருந்துள்ளார்கள். இது உணர்வுகளை (அறிவை) மந்தமாக்கும், நீதியை மட்டுப்படுத்தும் (நீதி. 31:1-9) இது நிதானத்தை இழக்கச் செய்யும் ( நீதி. 4:17)
நல்ல குணங்களை சீரழித் துவிடும்.(நீதி. 21:17)
சிற்றின்பப் பிரியன் தரித்திரனாவான், மதுபா னத்தை விரும்புகிறவன் ஐஸுவரியனாவதில்லை.


அடுத்து புலால் மறுத்தல் என்று கூற காரணம்:

நமது உடல் புலாலாக உள்ளது. புலால் உண்பது என்பது

நமது உடலை நாமே உண்பதற்கு சமம்.

நமது உடலை நாமே சாப்பிடுவோமா ?

பிற உயிர்களை கொன்று உண்ணுவது நம்மை நாமே கொன்று உண்ணுவதற்கு சமம்.

ஆகவேதான் புலாலை மறுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.


மேலும் மனிதர்கள் கள் அல்லது போதை பொருட்களை உண்ணுவதற்கு 

அடிப்படை காரணம் தற்காலிகமாக தன்னை மறக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.

அது தற்காலிகமாக மூளையை மழுங்க  செய்து தான் என்கின்ற உணர்வை அதிகரிக்க செய்து

பின்னர் இல்லாமல் செய்து விடும்.


ஆக மனிதர்கள் நான் என்கின்ற உணர்வை விடுவதன் மூலம் இன்பத்தை அடைய முடியும்

என்று தெரியாமலேயே உணர்கிறார்கள்.  ஆனால் உண்மையில் இறைவனை உணர வேண்டும்,

இறைவனோடு கலக்கக வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் போதையின் மூலம் இழக்கின்ற

தற்காலிக நான் என்கின்ற உணர்வு அல்லாமல் நிரந்தரமாக நான் என்கின்ற உணர்வு போய் இறை

உணர்வாக மாறும்.

ஆகவே அன்பர்களே கள் உண்ணாதீர்கள், புலாலை மறுங்கள், இறை நாட்டத்தை கொள்ளுங்கள்.



உலகிலேயே மிக பெரிய விலங்கு எது ?

யானை .. "யானை"   சைவ உணவு சாப்பிட்டே , உலகிலேயே மிக பெரிய விலங்காகவும் , வலிவு உள்ள விலங்காகவும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது






எனவே  தேகம் வலிவு உள்ளதாக இருக்கவும் , அதிக சக்தி கொண்டதாக இருக்கவும் சைவ உணவே சிறந்தது